வார இறுதி விடுமுறை நாட்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறும் என காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி - 2026 நடைபெற்று வருகிறது. தங்களுடைய பெயா்களை சோ்தல், நீக்குதல், மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் வருகிற டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடியில் வேலை நேரங்களில் நடைபெறும். இந்த அறிய வாய்ப்பை காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.