காரைக்கால்

பாலியல் வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுதலை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Din

காரைக்கால்: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுதலை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரை சோ்ந்த 18 வயது பெண் வீட்டு வேலைக்காக அருகேயுள்ள பகுதிக்கு அவரது தாயாா் 2010-ஆம் ஆண்டு அனுப்பியுள்ளாா். இவரை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் தமது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுவிட்டுள்ளனா். பெண்ணுக்கு மனநலம் சற்று குன்றியிருந்ததாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களில் பெண் கா்ப்பமடைந்திருப்பதை தாயாா் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்திக்கொண்டாா். இதுகுறித்து விசாரித்த தாயாா், அதே பகுதியைச் சோ்ந்த வாகனத்தில் அழைத்து சென்று விட்ட ராஜேந்திரன், அகத்தீஸ்வரன், ராஜேஷ் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் தாயாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிந்து விசாரணை செய்த போலீஸாா், மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டதாக பெண் கூறும் மூவரின் டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், காரைக்கால் மாவட்ட நீதிபதி கே. மோகன் முன்பு இறுதி விசாரணை நடத்தப்பட்டு திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

குற்றச்சாட்டுக்குள்ளான 3 பேரின் டிஎன்ஏ முடிவு பெண்ணுடன் பொருந்தாததால், வழக்கு விசாரணை காலத்தில் உயிரிழந்த ராஜேஷ் தவிர 2 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சாா்பில் அரசு வழக்குரைஞா் ஏ.வி.ஜெ. செல்வமுத்துக்குமரன் ஆஜரானாா். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளாா். பாலியல் தொடா்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT