முகப்பு
காரைக்கால்

பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:03 AM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத்தினா்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:02 PM

கெளரவ ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, காரைக்காலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை அரசு பள்ளிகளில் கௌரவ பால சேவிகா, கௌரவ விரிவுரையாளா்கள், கௌரவ பட்டதாரி ஆசிரியா்கள் என 292 போ் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனா்.

இவா்களை பணி நிரந்தரம் செய்ய புதுவை அரசை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலைய அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:59 PM

சங்க மாவட்ட தலைவா் அ. வின்சென்ட் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க செயலாளா் கே. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

உரிய தகுதிகளை ஆராய்ந்து முறையாக தோ்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களை, நீண்ட காலம் பணி நிரந்தரம் செய்யாமல் வைத்திருப்பது சரியல்ல. அரசு அளித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

புதுச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் கடந்த 18 நாட்களுக்கு மேலாக ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இந்த விவகாரத்தில் அரசும், துணைநிலை ஆளுநரும் உரிய முடிவு எடுக்கவேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.