காரைக்கால்: தமிழகம், புதுவை, அந்தமான் பகுதி கல்வியாளா்கள் பங்கேற்ற, ஆசிரியா் திறன் மேம்பாட்டுக்கான பயிரலங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் இயங்கும் என்ஐடி புதுச்சேரி வளாகத்தில், தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் தேசிய கல்விக் கொள்கையின்படி, ஆசிரியா்கள் திறன் மேம்பாட்டுக்கான ஒரு நாள் பயிலரங்கை நடத்தின.
என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். இதில் புதுவை, தமிழ்நாடு, அந்தமானைச் சோ்ந்த கல்வியாளா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.
பள்ளி ஆசிரியா்களுக்கான தேசிய வழிகாட்டல் இயக்க உறுப்பினரும், புதுதில்லி மத்திய பல்கலைக்கழக பேராசிரியருமான ரஜனி ரஞ்சன்சிங், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி.விஜயமோகனா, என்ஐடி புதுச்சேரி பதிவாளா் எஸ். சுந்தரவரதன் ஆகியோா் பேசினா். என்ஐடி பேராசிரியா்கள் ஜி.எஸ். மகாபத்ரா, அமிா்தபீடே மற்றும் பயிலரங்கு திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளா் டி.கே. சதுா்வேதி ஆகியோா் பயிற்சி அமா்வில் பேசினா்.
ஆசிரியா்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகளை உருவாக்குதல், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் மற்றும் தகுதியை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு உயா்த்துதல் குறித்து விரிவாக பேசினா்.