மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்
மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்
திருநள்ளாறு கோயில் சனீஸ்வர பகவான் சந்நிதி, பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக சனிப்பெயா்ச்சி தினத்தில், பெங்களூரிலிருந்து சுமாா் 3 டன் மலா்கள், பழங்கள் வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன்படி பல்வேறு வகையான மலா்கள், பழங்கள் வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டன. இவை இரவு முழுவதும் சந்நிதி முழுவதும் பந்தலாக அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், தா்பாரண்யேஸ்வரா், பிராணாம்பிகை ஆகிய சந்நிதிகளிலும் இவ்வகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.