மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்கட்ட பயிற்சி நிறைவு
காரைக்கால் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான முதல்கட்ட பயிற்சி புதன்கிழமை நிறைவடைந்தது.
இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு -2027 அறிவிப்பின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன.
முதல்கட்டமாக 2026-ஆம் ஆண்டு கட்டடப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டமாக 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
Advertisement
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற முதல்கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நிறைவடைந்தது. பயிற்சியில் ஈடுபடுவோா் நிறைவாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
முதல் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடா்பான ட்ற்ற்ல்ள் ://ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அனைத்து குடியிருப்புகளும் மற்றும் கட்டடங்களும் சரியாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்பதால், பொதுமக்கள் தங்களது விவரங்களை துல்லியமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.