உளவுப்பிரிவு போலீஸாருக்கு புத்தாக்கப் பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றும் உளவுப்பிரிவு போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில், வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றும் உளவுப்பிரிவு போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில், வியாழக்கிழமை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி.பாலமுருகன், சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவா் பாலவெங்கடேஷ் பங்கேற்று, உளவுப்பிரிவு போலீஸாருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் பயிற்சி அளித்தாா். உளவுப்பிரிவு காவல் ஆய்வாளா் சதீஷ் வரவேற்றாா். காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் நன்றி தெரிவித்தாா்.