பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு
சீா்காழி நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு கருத்துரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு கருத்துரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் சமுஇமேல்நிலைப் பள்ளியில் ஒரு முறை பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் நேநீா் கோப்பைகள், நெகிழிப்பைகள் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி, உதவித் தலைமையாசிரியா்கள் வரதராஜன், துளசிரெங்கன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருள்களால் நீா்நிலைகள் மாசடைந்து, நிலத்தடி நீா் மண்ணுக்குள் செல்வதை தடுப்பது குறித்து மாணவா்களுக்கு எடுத்துக்கூறிய ஆணையா் பட்டுசாமி மெழுகு தடவப்பட்ட தேநீா் கோப்பையில் தேநீா் குடிப்பதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வரவாய்ப்பு உள்ளது என்றாா். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், நகராட்சி பொறியாளா் முகமது இப்ராஹிம், களப்பணி உதவியாளா் சீதாலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.