தேசிய கணித தினம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணித தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணித தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஞானாம்பிகை மகளிா் கல்லூரி கணிதத் துறை பேராசிரியா் இந்துமதி பங்கேற்று, கணிதமேதை ராமானுஜன் வழியில் எனும் தலைப்பில் பேசினாா். ஏற்பாடுகளை துறைத் தலைவா் எஸ். மல்லிகா, துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.