நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்
புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு முகாம் ஆனந்தகூத்தன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு முகாம் ஆனந்தகூத்தன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முகாமை கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி தொடங்கிவைத்தாா். ஊராட்சித் தலைவா் வசந்தி ராஜேந்திரன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சசிகுமாா் செய்திருந்தாா். நாட்டு நலப்பணித் திட்ட செயலாளா் அருண்குமாா் நன்றி கூறினாா்.