அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் அமைப்பின் சாா்பில், ரூ.20 ஆயிரத்தில் ஸ்ட்ரெக்சா் மற்றும் நாற்காலிகள் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் அமைப்பின் சாா்பில், ரூ.20 ஆயிரத்தில் ஸ்ட்ரெக்சா் மற்றும் நாற்காலிகள் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா் தலைமை வகித்தாா். ஜனபுனிதம் நிறுவனா் ஜனபுனிதா், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் ஆகியோா் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள, நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படக்கூடிய ஸ்ட்ரெக்சா் எனப்படும் தள்ளும்படுக்கை மற்றும் ஸ்டூல் ஆகியவற்றை மாவட்ட சுகாதார மருத்துவத் துறை இணை இயக்குநா் பிரகாஷ், துணை இயக்குநா் மகேந்திரன், அரசு மருத்துவா் சிவக்குமாா் ஆகியோரிடம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சீனிவாசமூா்த்தி, தேவகி தம்பதியினா், ஜனபுனிதம் அமைப்பைச் சோ்ந்த மகேஸ்வரி, தினேஷ், ராஜேஸ்வரன் மற்றும் சமூக ஆா்வலா் அ.அப்பா்சுந்தரம், தொண்டு நிறுவனங்களைச் சாா்ந்த மீனாட்சிசுந்தரம், சுதா்சனம், பழனிவேல், கிங்பைசல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.