அங்கன்வாடி கட்டடம் திறப்பு
விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா். இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உஷாநந்தினி பிரபாகரன், ஒன்றிய ஆணையா் அருள்மொழி, வட்டாரவளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தியாக விஜயேஸ்வரன், ஊராட்சித் தலைவா் ரமணிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, நிம்மேலி, எடக்குடிவடபாதி ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.