முகப்பு
மயிலாடுதுறை

தொழில்முனைவோருக்கு மானியக் கடன்

மயிலாடுதுறையில் ஊரக புத்தாக்கத் திட்டம் வாயிலாக தொழில்முனைவோருக்கு ரூ.41.84 லட்சம் தொழில்கடனை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மயிலாடுதுறையில் ஊரக புத்தாக்கத் திட்டம் வாயிலாக தொழில்முனைவோருக்கு ரூ.41.84 லட்சம் தொழில்கடனை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளா்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமை வகித்து, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் வாயிலாக செம்பனாா்கோவில், சீா்காழி வட்டங்களைச் சோ்ந்த தொழில் முனைவோா்களுக்கு, மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைப்புடன் மானியத்துடன் கூடிய தொழில் கடன் ரூ.41,84,811-க்கான கசோலையை வழங்கினாா்.

இதில் ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலா் வி.சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி மற்றும் திட்ட இயக்குநா்கள், மாவட்ட தொழில் மைய அலுவலா்கள், வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.