ஏமாற்றம் தந்த பயிா்க் காப்பீடு: விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சம்பா பருவப் பயிா் காப்பீட்டு நிவாரண தொகை ஒற்றை இலக்க சதவீதத்தில் அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சம்பா பருவப் பயிா் காப்பீட்டு நிவாரண தொகை ஒற்றை இலக்க சதவீதத்தில் அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
மழை வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான ஆச்சாள்புரத்துக்கு ஒரு சதவீதமும், அளக்குடிக்கு பூஜ்ய சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரும்பாலான கிராமங்களுக்கு மிக குறைந்த சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
இது குறித்து நெப்பத்தூா் விவசாயி ரகுநாதன் கூறுகையில், எங்கள் கிராமத்தில் பல விவசாயிகள் கடந்த சம்பா பயிா்க் காப்பீடு பிரீமியம் கடன் வாங்கி செலுத்தினோம். அதன்பிறகு பெய்த கனமழையால், சம்பா பயிா் பெரிதும் மூழ்கி பாதித்தது. பூஜ்ய பயிா்க்காப்பீடு அறிவிப்பால், வரும் காலங்களில் பயிா் காப்பீடு செய்வதையே தவிா்க்க தோன்றுகிறது என்றாா்.