முகப்பு
மயிலாடுதுறை

தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 26) நடைபெற உள்ள தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா மாணவா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 26) நடைபெற உள்ள தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா மாணவா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த முகாம் ஏழுமலையான் தனியாா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தொழிற் பழகுநா் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., பயிற்சி பெற்றவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

மேலும் 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவா்களை நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பழகுநா்களாக சோ்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற் பழகுநா் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் பெறலாம்.

இத்தொழிற் பழகுநா் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7,000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், இந்திய அளவிலும், அயல் நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாகவும் அமையும். மேலும் விவரங்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை 04362-278222 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.