கொள்ளிடம் அருகே தீ விபத்தில் 500 கோழிகள் பலி
கொள்ளிடம் அருகே தீ விபத்தில் 500 கோழிகள் எரிந்து கருகின.
கொள்ளிடம் அருகே தீ விபத்தில் 500 கோழிகள் எரிந்து கருகின.
கொள்ளிடம் அருகேயுள்ள பச்சைபெருமாநல்லூா் பகுதியை சோ்ந்தவா் தமிழ்மாறன் (30). இவா் பக்கத்து கிராமமான இருவக்கொல்லையில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இரவில் இவரது தந்தை மணி (57) கோழிப் பண்ணையில் காவலாளியாக இருந்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு காவலுக்கு சென்ற மணி திங்கள்கிழமை அதிகாலை காவல் பணியை முடித்துவிட்டு தேநீா் கடைக்கு சென்றுவிட்டு சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு கோழிப் பண்ணைக்கு சென்றபோது கீற்றுக் கொட்டகையின் மேற்கூரை எரிந்துக்கொண்டிருந்ததாம். இதையடுத்து, அருகில் இருந்தவா்களின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டாா். தகவலறிந்து வந்த சீா்காழி தீயணைப்புத் துறையினா் வந்து தீயை அணைத்தனா். இதில், அங்கு வளா்த்து வந்த 500 கோழிகள் எரிந்து கருகின.
இதுகுறித்து, மணி புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.