திறன் தூண்டல் நிரல் வகுப்பு தொடக்க விழா
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான திறன்தூண்டல் நிரல் வகுப்புகளுக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான திறன்தூண்டல் நிரல் வகுப்புகளுக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இணையதளம் வழியாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி தொடங்கிய விழாவில், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் கல்லூரியின் சிறப்பம்சங்கள், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேசினாா். கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) எம். செந்தில்முருகன் திறன்தூண்டல் வகுப்புகளின் அவசியம் குறித்து பேசினாா். முன்னதாக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா் வி. தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். முடிவில், ஆங்கில துறைத் தலைவா் கே. கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா். இதில், கல்லூரி துணை முதல்வா், டீன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநா், அனைத்து துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் இணையதளம் வழியாக பங்கேற்றனா்.