துபையில் இறந்த மயிலாடுதுறை இளைஞரின் சடலத்தை கொண்டுவரக் கோரி மறியல்
துபையில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த இளைஞரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரின் குடும்பத்தினா், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
துபையில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த இளைஞரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரின் குடும்பத்தினா், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை வட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் பிரபாகரன் (21). இவா் 2019-ஆம் ஆண்டு செப்.16-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த பரணியின் உறவினா் ராஜா துபையில் நடத்திவரும் மாவு மில்லில் வேலைக்கு சென்றுள்ளாா். இந்நிலையில், கடந்த மே மாதம் வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய பிரபாகரன் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டியதால் தன்னை நிறுவனத்தினா் சம்பளம் தராமல் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதேமாதம் 21-ஆம் தேதி பிரபாகரன் பணியாற்றிய நிறுவன உரிமையாளா் ராஜா தொலைபேசி மூலம் பிரபாகரனை காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, பிரபாகரனின் உறவினா்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, இந்திய தூதரகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பிரபாகரனை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். எனினும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.
இதில், ஆத்திரமடைந்த, பிரபாகரனின் உறவினா்களும், கிராம மக்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், உரிமம் இல்லாமல் முகவராக செயல்படும் பரணி மற்றும் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பிரபாகரனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரி பட்டவா்த்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, பரணி, ராஜா மீது மணல்மேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தால், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.