மயிலாடுதுறை மாவட்டத்தில் 506 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 506 இடங்களில் சனிக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 506 இடங்களில் சனிக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பெருந்தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் சனிக்கிழமை (அக்.30) காலை 7 முதல் இரவு 7 மணி வரை மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது
அதன்படி மாவட்டத்தில் 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சிகளில் 420 இடங்கள், பேரூராட்சியில் 15 இடங்கள், நகராட்சிகளில் 19 இடங்கள், 6 அரசு மருத்துவமனைகள், 15 நடமாடும் கரோனா தடுப்பூசிக் குழு என மொத்தம் 506 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், எந்தவித அச்சமும் இன்றி தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.