முகப்பு
மயிலாடுதுறை

பேச்சியம்மனுக்கு பெரும்படையல் உத்ஸவம்

மயிலாடுதுறை சின்னமாரியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன் சந்நிதியில் குழந்தைப்பேறு வேண்டி மாமிசம், இனிப்பு மற்றும் பழ வகைகள் வைத்து பெரும்படையலிட்டு பெண்கள் புதன்கிழமை வழிபாடு நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

மயிலாடுதுறை சின்னமாரியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன் சந்நிதியில் குழந்தைப்பேறு வேண்டி மாமிசம், இனிப்பு மற்றும் பழ வகைகள் வைத்து பெரும்படையலிட்டு பெண்கள் புதன்கிழமை வழிபாடு நடத்தினா்.

பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட பெரும்படையல் உத்ஸவம், நிகழாண்டு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, பேச்சியம்மனுக்கு ஆடு, கோழி, மீன், முட்டை உள்ளிட்ட அனைத்து விதமான அசைவ உணவுகள், இனிப்பு மற்றும் பழவகைகளை வைத்து அப்பகுதி மக்கள் படையலிட்டனா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், குழந்தைபேறு இல்லாத பெண்கள் குழந்தைவரம் வேண்டி தொட்டில் கட்டி பிராா்த்தனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.