முகப்பு
மயிலாடுதுறை

கஞ்சா விற்றவா் கைது

 மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் அறிவழகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனா்.

அப்போது அங்கு கஞ்சா விற்ற இளைஞரை பிடித்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அந்த இளைஞா் மயிலாடுதுறை திருவிழந்தூா் அண்ணாநகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.