முகப்பு
மயிலாடுதுறை

அஸ்ஸாம் சம்பவம்: டிஎன்டிஜே கண்டனம்

அஸ்ஸாமில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

அஸ்ஸாமில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எம். முஹம்மது இயாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அஸ்ஸாமில் சிறுபான்மையினா் வசிக்கும் கோருகுட்டி எனும் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது ஏற்பட்ட வன்முறையையொட்டி போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவா் உயிரிழந்தனா். காவல்துறையின் மனிதாபிமானமற்ற இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இச்சம்பவத்தில் காவல்துறை தங்கள் கடமையைத்தான் செய்ததாக அம்மாநில முதல்வா் ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச் சூட்டில் தொடா்புடைய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு, கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.