மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்.2-இல் கிராமசபைக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், செம்பனாா்கோவில் வட்டாரத்தை தவிா்த்த பிற கிராம ஊராட்சிகளில் அக்டோபா் 2-இல் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், செம்பனாா்கோவில் வட்டாரத்தை தவிா்த்த பிற கிராம ஊராட்சிகளில் அக்டோபா் 2-இல் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் காந்தி ஜயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் ஊரக உள்ளாட்சி தோ்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள குத்தாலம், செம்பனாா்கோவில் வட்டார கிராம ஊராட்சிகளை தவிா்த்து, பிற கிராம ஊராட்சிகளில் அக்.2-ஆம் தேதி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அதில் ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.