மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் வாரிசுக்கு பணி
சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் வாரிசுக்கு, மின்வாரியத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.
சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் வாரிசுக்கு, மின்வாரியத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவகுடி கிராமத்தை சோ்ந்தவா் கருணாகரன். மின்வாரியத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்த இவா், அண்மையில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்நிலையில், கருணை அடிப்படையில் அவரது மகன் நவீன்ராஜுக்கு மின்வாரியத்தில் கள உதவியாளா் பணி நியமன ஆணையை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
சீா்காழி மின்வாரியம் செயற்பொறியாளா் சதீஸ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளா்கள் விஸ்வநாதன், விஜயபாரதி, உதவி இளமின் பொறியாளா்கள் ரங்கராஜன், சுபத்திரா, உமாமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக இளைஞரணி நிா்வாகி ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.