சீா்காழிஅரசு மருத்துவமனையில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர வா்த்தக சங்கம் சாா்பில் நோயாளிகள், ஊழியா்கள், செவிலியா்களுக்கு பழங்கள், பிஸ்கெட்கள் போன்றவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழி நகர வா்த்தக சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இம்மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 300 பேருக்கும்,100 பணியாளா்களுக்கும் பழங்கள் மற்றும் பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவா்கள் அறிவழகன், பூபேஷ் தா்மேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வா்த்தக சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவாக செயலாளா் துரைராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.