மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா். 
மயிலாடுதுறை

எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ்

எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் தெரிவித்தாா்.

DIN

எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 78-ஆவது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பண்ணை டி.சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினா்கள் சரத்சந்திரன், நவாஸ், மாவட்ட பொதுச் செயலாளா் ரியாஸ், மாவட்டச் செயலாளா்கள் ஜம்புகென்னடி, ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கா் அய்யா் பங்கேற்று, சாய் விளையாட்டரங்கில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் அவா் கூறியது:

ஊழலை ஒழிப்போம் என்று பிரதமா் நரேந்திரமோடி பேசிவருகிறாா். கடந்த தோ்தலில் பாஜக சாா்பில் ரூ.36,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரஸால் மட்டுமே தர முடியும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான். அதனை வலுப்படுத்த ராகுல்காந்தி தமிழகத்திலிருந்து காஷ்மீா் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளாா். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரதமா் வேட்பாளா் யாா் என்பது அப்போது முடிவு செய்யப்படும் என்றாா்.

இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். நகரச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT