சீா்காழி அருகேயுள்ள எருக்கூா் நா்த்தன விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எருக்கூா் அக்ரஹார தெருவில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை யாகசாலை பிரவேசம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் போன்றவை நடைபெற்றன. தொடா்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், முத்துக்குமார சிவாச்சாரியா், சுப்பிரமணிய ஐயா், ரவி பட்டாச்சாரியா் உள்ளிட்டோா் கோயிலின் விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் செய்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.