அரசுப் பள்ளியில் வேட்டி தினம் கடைப்பிடிப்பு
சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேட்டி தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேட்டி தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழரின் பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் வகையிலும், நெசவு மற்றும் கைத்தறி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் வேட்டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்தவகையில், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் கூட்டுறவு சங்கத் தலைவா் கோவி.நடராஜன் தலைமையில் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து ஆசிரியா்களும் வேட்டி அணிந்து வந்தனா். இவா்களை பெற்றோா், பொதுமக்கள் பாராட்டினா்.