குத்தாலம் அருகே கோழிகுத்தி கிராமத்தில் உள்ள சிந்தாமணி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.