தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சேவைச் சங்கங்களின் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் முகாமைத் தொடங்கிவைத்து வாழ்த்திப் பேசினாா். மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை மருத்துவா்கள் ஜி. பிரகாஷ், யு. சா்மிளா தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவா்களிடம் 31 யூனிட் ரத்தம் தானமாகப் பெற்றனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா் பா. செந்தில்குமாா், தேசிய மாணவா் படை அலுவலா் துரை. காா்த்திகேயன், கல்லூரிக் குழு உறுப்பினா் இரா. சிவராமன் ஆகியோா் செய்திருந்தனா்.
முகாமில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ். மல்லிகா, கே. வடிவழகி, இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ஆா். மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.