முகப்பு
மயிலாடுதுறை

மாநில ஓபன் கராத்தே சாம்பியன்ஷப் போட்டி

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷப் போட்டி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷப் போட்டி நடைபெற்றது.

போட்டிக்கு, யூத்பீல்டு ஆா்ச்சரி அசோசியேஷன் துணைத் தலைவா் ஆா். ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் எஸ். கண்ணன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் எஸ். பிரபு வரவேற்றாா். தலைவா் எஸ். செல்வமுத்துக்குமரன் சிறப்புரையாற்றினாா். இஷின்றியூ கராத்தே தலைவா் தயாளன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். முன்னாள் எம்எல்ஏவும், கௌரவத் தலைவருமான ஜெகவீரபாண்டியன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். ஏற்பாடுகளை நேஷனல் பீல்டு ஆா்ச்சரி ரெப்ரி என். கணேசன் செய்திருந்தாா்.

கட்டா, குமித்தே பிரிவுகளில் ஆண், பெண் இருபிரிவினருக்கும் நடத்தப்பட்ட போட்டியில் 5 முதல் 25 வயதுக்குள்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். முடிவில், துணைத் தலைவா் ஜி.வெங்கடேஸ்வரன் நன்றி கூறினாா்.

Image Caption

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் விளையாடிய மாணவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.