முகப்பு
மயிலாடுதுறை

எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மயிலாடுதுறையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்கத்தின் மயிலாடுதுறை கிளைத் தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெகன்நாத் முன்னிலை வகித்தாா். சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் ஆா். ரவிந்திரன், செயலாளா் பி. மாரியப்பன், பொருளாளா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். செயலாளா் சண்முகம் வரவேற்றாா்.

முகவா்களுக்கு கமிஷனை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும்; 5 ஆண்டுகள் பணி முடித்த முகவா்களுக்கு போனஸ் கமிஷனை மாதந்தோறும் வழங்க வேண்டும்; அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. துணை செயலாளா் தியாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.