மயிலாடுதுறையில் ஜனவரி 31-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 31-ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், தோட்டக்கலைதுறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்கலாம்.