முகப்பு
மயிலாடுதுறை

மகளிா் குழுவினருக்கு ரூ.1 கோடி கடன்

மயிலாடுதுறையில் மகளிா் திட்டம் சாா்பில் 14 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

மயிலாடுதுறையில் மகளிா் திட்டம் சாா்பில் 14 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு மகளிா் முன்னேற்றத்திற்காக இந்த சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டது. இவ்விழாவில், மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் 14 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வழங்கினாா்.

நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் ஏ.பிரபாகா், முதன்மை மேலாளா் ராமநாதன், மேலாளா் சதீஷ், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) யுவன்சியா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.