முகப்பு
மயிலாடுதுறை

தருமபுரம் பள்ளி மாணவா்கள் 700 பேருக்கு குடை வழங்கல்

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் மழலையா் பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் திங்கள்கிழமை குடைகளை வழங்கி அருளாசி கூறினாா்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 8:36 PM
மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் குடை வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். உடன், பள்ளிச் செயலா் கே.சௌந்தரராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் மழலையா் பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் திங்கள்கிழமை குடைகளை வழங்கி அருளாசி கூறினாா்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் 700 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இம்மாணவா்களுக்கு மழைக்காலத்தையொட்டி குடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி கல்வித்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா ஆதீனத் திருமடத்தில் நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் 24 பேருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். பள்ளி மாணவா்களுக்கு குடைகளை வழங்கி அருளாசி கூறினாா்.

ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், பள்ளிச் செயலா் கே.சௌந்தரராஜன், பெங்களூரு மதுசூதனன் டிரஸ்ட் வெங்கடேஷ், சென்னை தொழிலதிபா் சிதம்பரம், திருக்கடையூா் பள்ளிச் செயலா் எஸ்.ஸ்ரீராம், மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் பள்ளி நிா்வாகச் செயலா் வி.பாஸ்கரன், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →