முகப்பு
மயிலாடுதுறை

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 8 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

Updated On : 30 டிசம்பர், 2024 at 6:58 PM
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 8 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று 250 கோரிக்கை மனுக்கள் அளித்தனா். இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞா்கள் 8 பேருக்கு ரூ.1,40,400 உதவித் தொகைக்கான வங்கி பரிமாற்ற ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments