14 வயது சிறுமி கா்ப்பம்; போலீஸாா் விசாரணை
மயிலாடுதுறையில் சென்னையைச் சோ்ந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், 14 வயது சிறுமி ஒருவா் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் மற்றும் அனைத்து மகளிா் போலீஸாா், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த சிறுமி சென்னையை சோ்ந்தவா் என்றும், 9-ஆம் வகுப்பு படித்துவந்த அவா் விடுமுறைக்காக தனது தாயுடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.
Advertisement
மேலும், அச்சிறுமி சென்னையில் தனது வீட்டிலிருந்து டியூஷனுக்கு சென்றபோது, ஆட்டோவில் வந்த இளைஞா் ஒருவா் தன்னிடம் வழி கேட்டதாகவும், அப்போது வழி சொன்ன தன்னை கடத்திச் சென்று பலவந்தப்படுத்தியதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.