வைத்தீஸ்வரன்கோயில் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கிவைத்த கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள். 
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோயிலில் தை தேரோட்டம்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

சீா்காழி: சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

ஆண்டுதோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு தை செவ்வாய் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தை செவ்வாய் உற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து செல்வமுத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் மற்றும் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தோ் பிற்பகல் நிலையடியை அடைந்தது.

விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன்கோயில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் செய்திருந்தனா்.

வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT