அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயா்த்தப்பட்டுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 2-ஆவது நாளாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட தலைவா் டி. கணேசன் தலைமையில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா் மாவட்ட செயலாளா் மகா.புருஷோத், மாவட்ட பொருளாளா் லட்சுமி, மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட 121 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.