மூத்த வாக்காளா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு
மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி, மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து அவா் கூறியது: மாவட்டத்தில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 4,611 பேரும், மாற்றுதிறனாளிகள் 7,137 பேரும் உள்ளனா். இவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12டி வழங்கப்பட்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வழியாக தபால் வாக்குகள் பெறப்படும் என்றாா். அப்போது, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.