நாகப்பட்டினம்

சாலை விபத்தில் இளைஞர் சாவு

DIN

மயிலாடுதுறை அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கொற்கை அம்பேத்கர்  தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன்  ராஜசேகர். இவர், ஸ்டிக்கர் ஒட்டும் தொழில்  செய்து வந்தவர். திராவிடமணி மகன் இளையராஜா(29). இவர், நீடூரில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இருவரும் கள்ளிக்காடு பகுதியிலிருந்து கொற்கைக்கு மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோர மரத்தில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற ராஜசேகர்(20) நிகழ்விடத்திலேயே இறந்தார். மணல்மேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT