நாகப்பட்டினம்

விஷம் குடித்த இளைஞர் சாவு

DIN

மயிலாடுதுறையில் விஷம் குடித்த இளைஞர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  பாலசுப்பிரமணியன் மகன் ஜெயசூர்யா (26). இவர், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகிய நிலையில் குழந்தை இல்லையாம்.
இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜெயசூர்யா கடந்த 23-ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தாராம்.
இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT