வாய்க்காலில் விவசாய தொழிலாளி சடலம் மீட்பு
நாகை மாவட்டம், செம்பனார்கோயில் காவல் சரகம், கண்ணன்குடி கிராமத்தில் உள்ள வாய்க்காலில் விவசாயத் தொழிலாளி இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், செம்பனார்கோயில் காவல் சரகம், கண்ணன்குடி கிராமத்தில் உள்ள வாய்க்காலில் விவசாயத் தொழிலாளி இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
கண்ணன்குடி காலனித் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் சாரங்கபாணி (38). விவசாயத் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சாரங்கபாணி மீண்டும் வீடுக்கு திரும்பவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் சாரங்கபாணி இறந்து கிடப்பது புதன்கிழமை காலை தெரியவந்தது. செம்பனார்கோயில் போலீஸார், சாரங்கபாணி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.