அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிப் பரிமாற்ற நிகழ்ச்சி சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளின் நடைமுறைகளை கிராமப்புற பள்ளி மாணவ, மாணவியரும், கிராமப்புற பள்ளிகளின் நடைமுறைகளை நகர்புற பள்ளி மாணவ, மாணவியரும் அறிந்துகொள்ள பள்ளி பரிமாற்றத் திட்டம் செயல்படுத்
தப்படுகிறது.
அதன்படி, பழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள், சீர்காழி சியாமளா பெண்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சியாமளா பள்ளி செயலர் முரளிதரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் திலகவதி முன்னிலை வகித்தார். இதில் இரு பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.