மயிலாடுதுறை பகுதிகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரை
மயிலாடுதுறை பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின.
நாகப்பட்டினம்மயிலாடுதுறை பகுதிகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரை
மயிலாடுதுறை பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின.
மயிலாடுதுறை பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்தபோது, அதிலிருந்து தீப்பொறி குடிசை வீடுகள் மீது விழுந்ததால், மயிலாடுதுறை வட்டம், நீடுர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆ.ஜேம்ஸ் ஆல்பர்ட், ஊர்குடி கீழத் தெருவைச் சேர்ந்த ச.ராஜேந்திரன் ஆகியோரது குடிசை வீடுகளும், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் புதன்கிழமை தீக்கிரையாயின.
இதேபோல் மயிலாடுதுறை வட்டம், நல்லத்துக்குடி ஓம் சக்தி நகரைச் சேர்ந்த வீரமணி என்பவரது குடிசை வீடு, வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் கருகின.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் எஸ்.காந்திமதி மற்றும் வருவாய்த் துறையினர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அரசின் சார்பில் வழங்கப்படும் உதவிகளை வியாழக்கிழமை வழங்கினர் .