மயிலாடுதுறையில் பிப்ரவரி 6 மின் தடை
நாகப்பட்டினம்மயிலாடுதுறையில் பிப்ரவரி 6 மின் தடை
மயிலாடுதுறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.6) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார செயற்பொறியாளர் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், வழுவூர் ஆகிய ஊர்களுக்கும், இவ்வூர்களைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.