கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
கோயில் பாதுகாப்புப் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோயில் பாதுகாப்புப் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்டத்தில் 54 கோயில் இரவுப் பாதுகாப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 58 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது கோயில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்திட வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.