நாகப்பட்டினம்

"மயிலாடுதுறையில் ரூ. 72 லட்சத்தில் நூலகக் கட்டம் கட்டப்படும்'

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ரூ. 72 லட்சத்தில் நூலகக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சட்டப் பேரவையில்  தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தெடரில், மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறையில் 1961 முதல் வாடகைக் கட்டடத்திலேயே இயங்கும் நூலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மயிலாடுதுறையில் 2,358 சதுர அடி பரப்பளவில் புதிய நூலகக் கட்டடம் கட்டுவதற்கு  ரூ. 72 லட்சம் செலவாகும் என்பதால் எதிர்காலத்தில் அவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இத் தகவல் எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை   வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT