முகப்பு
நாகப்பட்டினம்

காவல் ஆய்வாளர் மீது அவதூறு பரப்பியவர் கைது

திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மீது அவதூறு பரப்பியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:25 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மீது அவதூறு பரப்பியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
பூம்புகார் அருகேயுள்ள திருவெண்காடு வடக்கு தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜன்(60) . இவர் கடந்த நாள்களுக்கு முன்பு திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மற்றும் திருவெண்காடு காவல் துறை மீது அவதூறு பரப்பும் நோக்கில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டும், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வேலுதேவி திருவெண்காடு காவல் நிலையத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் துரைராஜன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அளித்த புகாரின்பேரில், போலீஸார் துரைராஜனை கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திவிட்டு, பொறையார் கிளை சிறையில் அடைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.