முகப்பு
நாகப்பட்டினம்

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருவெண்காடு அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.

Updated On : 13 நவம்பர், 2018 at 5:29 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM


திருவெண்காடு அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. பி.வி. பாரதி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மர்மகாய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, மருத்துவர்களிடம் தாமமின்றி சிகிச்சையளிக்க கேட்டுக்கொண்டார்.
அடுத்து, மருத்துவமனை வளாகம் முழுவதும் குப்பை மற்றும் முள்புதர்கள் இருப்பதை அறிந்த அவர் ஊராட்சி மூலம் முள்புதர்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டதுடன், அங்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வட்டார சுகாதார அலுவலர் கனிமொழி, மருத்துவர்கள் ஜாஸ்மின் பிரிசில்லா, ரம்யாதேவி சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராமன், துரைகார்த்திக், அமிர்தலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.